வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Friday, December 24, 2010

வ - குவாட்டர் கட்டிங் எனக்கு பிடித்திருந்தது ஏன்?



     குவாட்டர் கட்டிங் என்ற பெயருக்கு ஏற்ற படம். படத்தின் டிரெய்லர் பார்த்ததில் இருந்து படம் என்று வெளியாகும் என்ற ஆர்வம் மனதில் இருந்தது. பிரெஞ்சு படங்களைப் போன்று மிக எள்ளலான தொணியில் இருந்ததே இதற்கு காரணம். அதன்பிறகு வந்த மீதி டிரெய்லர்களையும் பார்த்த பிறகு கொள்ளாத ஆர்வம் மனதில் கொளுந்துவிட்டு எறிந்து கொண்டிருந்தது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த பிறகுதான் ஆர்வம்   அடங்கியது. படம் எதிர்பார்த்தபடி ரகளையாகவே இருந்தது.  hangover, daytime drinking போன்ற படங்களைப் போன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நுழைந்தேன். படம் ஏமாற்றவில்லை.

 துபாய் செல்வதற்காக சென்னை வந்திறங்குகிற சுந்தர்ராஜன் என்கிற சுரா. தனது வருங்கால மச்சான் மார்த்தாண்டத்துடன் சேர்ந்து இரவு முழுவதும் ஒரு குவாட்டரைத் தேடி சென்னையில் அலைவதுதான் படத்தின் ஒன் லைன்.

தமிழர்கள் என்றுமே சந்தோசங்களை ஒருவித குற்ற உணர்வுடன்தான் அனுபவிப்பார்கள். அதில் மதுவும் ஒன்று. அப்படிப்பட்ட மதுவை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அதற்காக இயக்குநர்களுக்கு ஒரு கட்டிங்கே  கொடுக்கலாம்.

சுற்றிலும் இடை சிறுத்த வெளுத்த பெண்களின் ஆட்டம், கைகளில் மதுபாட்டிலுடன் துபாய் ஷேக் ஆகும் கனவுடன் இருக்கும் சுராவிற்கு அதிர்ச்சி தகவலாய் தெரிய வருகிறது துபாயில்  இருக்கும் கட்டுப்பாடுகள். எனவே இங்கு கடைசியாய் ஒரு குவார்ட்டர் அடித்துவிட்டு விமானம் ஏறுவது என்ற முடிவுடன் கடையைத் தேடுகிறார்கள்.

தேர்தல் என்பதால் டாஸ்மாக் விடுமுறை. பிளாக்கில் வாங்க அலைகிறார்கள் அப்போது அவர்கள் சந்திக்கும் விசித்திர மனிதர்கள், விநோத சிக்கல்கள் என காட்சிப்படுத்தி கலக்கியிருக்கிறார்கள். பலவித  போராட்டங்களுக்கு பிறகு குவா ட்டரோ? கட்டிங்கோ கிடைத்ததா? என்பதுதான் கிளைமாக்ஸ்.

   மாட்டு டாக்டர் மார்த்தாண்டமும், சுராவும் படம் முழுக்க கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். காசிமேடு கருவாட்டுக் கடைக்காரர், வாகனங்களை கொளுத்தும் தீச்குச்சி ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சிங்காரி,  சுயேட்சை வேட்பாளர், மார்த்தாண்டத்தின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மக்கு மாணவி சரோ (லேகா வாசிங்டன்), சூதாட்ட கிளப் நடத்தும் பிரின்ஸ் அவனது அப்பா கிங்ஸ் (இரண்டு பாத்திரங்களும் ஜான்விஜய்) போன்றவர்கள் திரைக்கதையை நகர்த்துகிறார்கள்.

படம் பலருக்கும் பிடிக்கவில்லை.. பயங்கர flop என்று சொல்கிறார்கள். எனினும் எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கான காரணங்கள் இதோ...

1. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் அப்பாவி நாயகன், இங்குள்ள ரவுடிகளுக்கு சவால் விட்டு, நான்கு பக்க வசனம் பேசி நமது காதைக் கிழித்து தொங்கப்போட... நாம எப்படா? தியேட்டரில் இருந்து வெளியேறுவோம் என்ற சூழலில் சுபம் போடும் வழக்கமான கதையைத் தவிர்த்தது. 
2. இரவு 9.30 மணியிலிருந்து 10 மணிவரை டாஸ்மாக் அருகில் சென்றால் தெரியும். அபிமன்யூவே வந்தாலும் அந்த சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைய முடியாது. அந்தளவிற்கு கூட்டம் நெரியும. அப்போது ஒரு குடிமகனுக்கு ஏற்படும் தவிப்பை நீட்டி முழக்கி கதையாக்கியிருப்பதற்காக.

3. படத்தின் ஒளிப்பதிவு அருமை. கதை இரவில் நடக்கும் படத்தில் கண்களுக்கு சலிப்பில்லாமல் அருமையான இருளும், ஒளியும் கலந்த ஒளிப்பதிவைத் தந்த தற்காக. படம் முழுவதும் கலை இயக்குநரும் மிகவும் வண்ணமயமான பின்னணியைத் தந்திருக்கிறார். இது மிகவும் சவாலான பணி என்றுதான் நினைக்கிறேன். என்னைவிட கூடுதலாக சினிமா அறிந்தவர்கள் விளக்கினால் சந்தோசப்படுவேன்.
4 . கண்கள் வழியோ அல்லது புறக்கடை வழியோ எப்படியாவது நுழைந்து விடும் காதல் காட்சிகள் இல்லாமல் இருந்ததற்கு. சென்னைக்கு வரும் நாயகன் இங்குள்ள பெண்ணை ஆபத்திலிருந்து காப்பாற்றி, துபாய் செல்லாமல் தங்கி விடுவதுதானே தமிழ் திரைப்பட மரபு. அதை உடைத்ததற்காக.
5 .  படத்தின் பாடல்களும் எனக்கு மிகவும் படித்திருந்தது. குவாட்டரு! குவாட்டரு! என்ற பாடல் உற்சாக பானம்போல் இருந்தது. லேகா பாடும் மெலோடி கட்டிங் அடித்துவிட்டு அறைக்கு ஆளில்லா சாலையில் திரும்பும்போது ஏற்படும் உணர்வைப் போன்று மென்மையாக இருந்தது. கடைசிப்பாடல் சரியான குத்து.. அதன் வரிகளும் அசத்தல்.
6 . படத்தின் வசனங்கள் ஸ்டிரிக்ட்டாக காமெடி செய்தன. அதுவும் குவாட்டர் அடித்தே தீர வேண்டும் என்பதற்காக சிவா பேசும் வசனம்... என்னமா யோசிக்கிறாய்ங்கப்பா? என எண்ண வைத்தது. சிவா சரணின் மூக்கை உடைக்கும் வசனங்கள் நிஜமாலுமே குபீர் சிரிப்பை வரவழைத்தன.
7 . மாட்டு டாக்டரான சரணை மக்காக காட்டாமல், புத்திசாலியாக காட்டியதற்காக... அதுவும் சீட்டாட்டத்தில் கில்லாடியாக காட்டியது எனக்கெல்லாம் தனிப்பட்ட வித த்தில் பெருமை. தமிழ் சினிமாவில் தமிழ் வாத்தியாரையும், மாட்டு டாக்டரையும் கேவலமாகத்தான் சித்தரிப்பார்கள்.  அந்த கட்டுப்பெட்டித் தனத்தை உடைத்ததற்காக.

 ஆக இதுபோன்ற காரணங்களால் குவாட்டர் கட்டிங் எனக்கு பிடித்திருந்தது. படம் சரியாக போகாததற்கு காரணம் nativity இல்லாததுதான். தமிழ்நாட்டு குடிமகன்கள் ஒருமுறை பார்த்திருந்தால் கூட படம் வசூலை குவித்திருக்கும். என்ன செய்வது எல்லாம் காலத்தின் கோலம்!

4 comments:

சதீஸ் கண்ணன் said...

எனக்கு 'ஓரம் போ' ரெம்ப பிடித்த படம்.. அந்த படத்திலேயே புஸ்கர் & காயத்ரிக்கு விசிறி ஆயாச்சு..
நான் வ - குவாட்டர் கட்டிங் இன்னும் பார்க்கவில்லை.. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி Trailer எதிர்பார்ப்பை ஏகத்திற்கு எகிற விட்டது...  ஆனால் நண்பர்கள் அனைவரும் படம் மொக்கை என்றதால் படத்தை தவற விட்டு விட்டேன்.. உங்க விமர்சனம் படிச்சதுல எனக்கு ஒரு சந்தோசம்.. உடனே படம் பார்த்திட வேண்டியது தான்

வேழமுகன் said...

Yes it is a very nice movie.

Visuals and music are in line with the subject.

I like your views on the movie.

Unknown said...

I Know u r great critic , once again u did it man

Anonymous said...

wswsmwklnxnxnxenxdjn wjsnwnw wjsnwsnws