வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Tuesday, November 30, 2010

ஷகிலாவுக்கு ஏன் விருதுகள் அளிக்கக் கூடாது?

      சாப்பாட்டை மறைத்து வைத்து சாப்பிடுவோம்.... ஆனால் நடுத்தெருவில் மலம் கழிப்போம்... இதுதான் நமது பொதுவான குணநலனாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் தற்போது ஷகிலாவைக் கேவலப்படுத்தும் தமிழ் திரைப்படங்கள் வடிவில் வந்துகொண்டிருக்கிறது. தூள் என்ற படத்தில் ஆரம்பித்து, ஜெயம் போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் வரை நிறையப்படங்களில் ஷகிலாவை மிகவும் கேவலமாக, இரட்டை அர்த்த பாணியில் கதாபாத்திரமாக உருவகித்து வருகிறார்கள். இது மல்லாக்க படுத்துக் கொண்டு மேல்நோக்கி எச்சில் துப்புவதற்கு சமமானது.

   நாம் மிகவும் மரியாதையாக வைத்து போற்ற வேண்டிய நடிகைகளில் முதன்மையானவர் ஷகிலா. காமப் பெருங்கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பலருக்கும் ஆறுதல் அளித்தவர் ஷகிலா. மற்ற நடிகைகள் தொப்புளைக் காட்டி, மார்பு கச்சையை சிறிதாக்கி நமது கற்பனையைத் தூண்டி வெறியேற்றனார்கள். ஷகிலா இது அவ்வளவுதான் என நம்மை சாந்தப்படுத்தினார். எனவே ஷகிலாதான் மதிக்கப்பட வேண்டியவர்.

   
ஒரு B-grade படத்தில் நடிப்பது மிகவும்  சிரமமான விஷயம். கண்ட இடத்தில் கை வைப்பார்கள், continuity, re recording. lighting  போன்ற இன்ன பிற இத்யாதிகளும் உண்டு. பணத்திற்காக வேறு வழியின்றி நடித்தவர்களுள் ஷகிலாவும் ஒருவர்.  அவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை... கேவலப்படுத்தமால் நல்ல கதா பாத்திரங்களையாவது அளிக்கலாம். ஒரு ஆணின் மன நிலையில் இருந்துதான் ஷகிலாவை கேவலப்படுத்தும் இதுபோன்ற பாத்திரங்களை வடிவமைக்கிறார்கள்.
ஷகிலா வரும் காட்சிகள் பெண்களுக்கு வெறுப்பையும் , ஆண்களுக்கு எள்ளல் உணர் வையும் ஏற்படுத்துகின்றன. இதுமிகவும் தவறான மனநிலை. ஒரு காலத்தில் மோகன்லால், மம்முட்டி படங்களை காலி செய்த பெருமை ஷகிலாவிற்கு உண்டு. இதன் உள் அர்த்தம் என்னவென்றால் பெரும்பான்மையானவர்கள் விரும்பி பார்த்தார்கள் என்பதுதான்.


எனது கல்லூரிக் காலங்களில் சனிக்கிழமையன்று இரவு ஷகிலா படம் பார்க்க கூட்டம் அலைமோதும். சூர்யா டி.வி.யில் வரும் ஷகிலா படமா, zee MGM-ல் வரும் ஆங்கிலப் படங்களா? என்ற பிரச்சினையே எழுந்த்துண்டு. ஷகிலாவின் ரசிகர்கள் மோதலுக்கே கூட தயாராக இருந்தார்கள்.  அரசின் மிரட்டலுக்கு பயந்து தற்போது ஷகிலா b-grade படங்களில் நடிப்பதில்லை. என்றாலும் என்னைப் பொருத்தவரை அவர் ஒரு legend. எனவே அவரை கேவலப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தன்னை கேவலப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதை ஷகிலா அவர்கள் தவிர்க்க வேண்டும். ஷகிலா படங்களை பார்த்து ரசித்திராதவர்கள் மட்டும் அவரைக் கேவலப்படுத்தும் காட்சிகளுக்கு சிரிக்கலாம் என்றால், அது  அடுத்தவன் மனைவியை மனதில் நினைத்திராதவர்கள் மட்டும்  விபச்சாரியை நோக்கி கல்லெறியலாம் என்று ஏசுநாதர் கூறியதற்கு ஒப்பானதாக  இருக்கும்.

2 comments:

Jawahar said...

ஷகீலாவுக்கு அவார்டெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. அதுமாதிரி நடிக்க நூற்றுக் கணக்கான பேர் காத்திருக்கிறார்கள். ரிஸ்க் எடுத்து ஓட்டுகிற தியேட்டர்க்காரர்களுக்குத்தான் அவார்ட் தரவேண்டும்!

http://kgjawarlal.wordpress.com

That's Tamil said...

sariyana pathivu.- Chandra