வற்றிப்போவதாய் இருந்தாலும்
இந்த மீனுக்கு
ஓடை போதும்
உனது கண்ணாடித்தொட்டியில் போய்
நீயிரு!
(எழுதியவர் - கவிஞர் பச்சியப்பன்.)
எனக்குள் ஒரு காடு இருந்தது
சில மிருகங்களும் இருந்தன
வேட்டையாடத் தெரியவில்லை
கடைசியில் காட்டையே அழிக்க
வேண்டியதாயிற்று.
எல்லாம் எட்டிவிடும் தூரத்தில்தான்
நடுவில் சில
எச்சில் பருக்கைகள்.
(எழுதியவர் - கல்யாண்ஜி)
என்னைக் குறிக்கும்
நான் என்பதை
மிகச்சிறியதாய் உணர்கிறேன்
பொறுத்திரு எனக்குள் ஒருவன்
வெடித்துக் கிளம்பக் காத்திருக்கிறான்!
(எழுதியது யாரென ஞாபகமில்லை)
No comments:
Post a Comment