உதிர்ந்தும் பொறுக்கமுடியாது போனநாவல் பழமெல்லாம் புழுவாயிருக்கும்
புழுக்கடித்து முள்விடுத்தோடிய
மீன்களெல்லாம் சிறியதாயிருக்கும்
நீர்விட்டு பிடுங்கியும் மண்ணுள் பதுங்கிய
கடலைகள் எல்லாம் சொத்தையாயிருக்கும்
அம்மா எனக்கூட்டிய சோறுவிடுத்து
அண்ணனுக்கு ஊட்டியதெல்லாம் உப்பதிகமாயிருக்கும்.
சூரைத்தேங்காயில் நான் பொறுக்காதவையெல்லாம்
சாக்கடையில் விழுந்திருக்கும்...
No comments:
Post a Comment