வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

வாழ்வும் வாழ்வு நிமித்தமும்

Tuesday, July 13, 2010

ச்சீ இந்தப் பழம் புளிக்கும்!

உதிர்ந்தும் பொறுக்கமுடியாது போனநாவல் பழமெல்லாம் புழுவாயிருக்கும்

புழுக்கடித்து முள்விடுத்தோடிய
மீன்களெல்லாம் சிறியதாயிருக்கும்

நீர்விட்டு பிடுங்கியும் மண்ணுள் பதுங்கிய
கடலைகள் எல்லாம் சொத்தையாயிருக்கும்

அம்மா எனக்கூட்டிய சோறுவிடுத்து
அண்ணனுக்கு ஊட்டியதெல்லாம் உப்பதிகமாயிருக்கும்.

சூரைத்தேங்காயில் நான் பொறுக்காதவையெல்லாம்
சாக்கடையில் விழுந்திருக்கும்...

No comments: